காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (28) இரவு காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களின் 5 படகுகளை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இந்நிலையில், படகில் இருந்த 24 தமிழக மீனவர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.
24 மீனவர்களும் இன்று (29) ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் 24 மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
