பொலனறுவைப் பகுதியில் 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி இன்று (29) நீதிமன்றம் தீர்பளித்தது.
அத்துடன், பத்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் பொலனறுவை மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
தாய் இல்லாத நிலையில் தனது பாதுகாப்பில் இருந்த 15 வயது சிறுமியை 2015 ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கர்ப்பிணியாக்கியிருந்த குறித்த குற்றாவளியான தந்தைக்கு மேற்குறித்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
#Srilanka news
