உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வேல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் வகையில், 700 சிறைக் கைதிகளை விடுவிப்பதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பாந்தட்ட போட்டித் தொடர், கட்டாரில் நடந்து வருகிறது. இதில் ஈரான் தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 6-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஈரான் அணி, வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஈரானின் இவ்வெற்றி, உலகக் கிண்ண வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை ஈரான் அரசு அறிவித்து வருகிறது.
அவ்வகையில், தற்போது ஈரான் நீதித் துறை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “இந்த நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து 709 சிறைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள்.
