யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ரிக் ரொக் காணொளி எடுத்தபோது இளைஞன் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கடலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
குறிந்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கடலில் வீழ்ந்துள்ளார்.
அவ்விடத்தில் கூடிய இளைஞர்களும், பாதுகாப்பு தரப்பினரும் கடலில் வீழ்ந்த இளைஞரை மீட்டெடுத்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டு கரைசேர்த்தனர்.
