ஒதியமலைப் படுகொலையின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (02) உணர்ச்சி மிக்க எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
1984 ஆம் ஆண்டு இதே நாளில் ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஒதியமலை சனசமூக வளாகத்தில் இடம்பெற்றது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்ப்பட்ட நினைவுக் கற்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
