கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பேராதனைப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிலிமத்தலாவ, கங்கொட பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
