வவுனியா மெனிக்பாம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (04) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட போது மன்னாரில் இருந்து மதவாச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் மோதியது.
புகையிரதம் மோதியதில் படுகாயம் அடைந்தவர் அங்கு நின்ற மக்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மோகனதாஸ் என்ற 55 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
