பாகிஸ்தானின் புதிய இராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளை நேற்றுப் பார்வையிட்டார்.
இந்நிலையில், ஆசிம் முனீர் தெரிவித்ததாவது:
“கில்கித் பல்கிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எங்கள்மீது போர் திணிக்கப்பட்டால் தாய்நாட்டின் ஒவ்வொரு இனப் பகுதியையும் பாதுகாக்க மட்டுமின்றி எதிரிகளை எதிர்த்துப் போரிடவும் பாகிஸ்தான் இராணுவம் தயாராக உள்ளது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்” என்றார்.
