கொழும்பில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஷார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், தெஹிவளை – அபோன்சு மாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குற்றவாளியான 44 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
