அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அறிவித்து அரசாங்கத்தால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் திணேஷ் குணவர்த்தனவினால் இவ் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இவ் நடவடிக்கை 2023 ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியலமைப்பின் மூலம் அல்லது ஏதேனும் சட்டத்தின் மூலம் கட்டாயம் ஓய்வுபெறும் வயது குறிப்பட்டுள்ள ஊழியர்கள் தவிர ஏனைய அனைத்து அரசாங்க பணியாளர்களும் 60 வயது பூர்த்தியடையும்போது, கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெற வேண்டும் எனவுழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
