யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் இன்று(07) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட நிலையத்தை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜெயசிங்க கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே , உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன், யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்.மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
