இந்தியா – கேரளாவின் திருச்சூரில் உள்ள புனித தோமஸ் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதன்போது நீரில் மிதக்கும் புதிய வகை ஐந்து பூச்சியை கண்டுபிடித்தனர். இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என பெயரிட்டனர். இது இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 3-வது வகை பூச்சியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
