இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்ட நால்வர் பயணித்துள்ளடன், 61 வயதான பி.எஸ்.மயில்வாகனம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் காயம் அடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
