நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் மண் மூடைகளை அடுக்கி கடல் நீர் உட்புகுவதை தடுத்துள்ளனர்.
ஆயினும், தொடர்ச்சியாக கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுந்தால் மக்களின் குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
