தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கூட்டணியில் இருந்து உடன் நீக்கப்படுவதாக அதன் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
“வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்காது அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உடனடியாக கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுவதோடு, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும்” என கூட்டணியின் தலைவர் மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.
