நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தபட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், டிசம்பர் -10 (நாளை)
முதல் டிசம்பர் – 12 ஆம் திகதி திங்கட்கிழமை வரையான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த நாட்களில் 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், பகல் நேரத்தில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
