இந்தியா – தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத், நயிம்பேட்டையை சேர்ந்த ரவளி (வயது22) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் அவரது பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து இருந்தனர்.
இந்த திருமணத்தில் ரவளிக்கு விருப்பம் இல்லாத போதும் ரவளியின் பெற்றோர் திருமணத்திற்கு தடல்புடலாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இன்று காலை 10 மணிக்கு திருமணம் நடக்க இருந்ததால் நேற்று மாலையே மணமகன், மணமகள் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு ரவளி வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றார். வீட்டிற்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திருமண மண்டபத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அறையில் மின்விசிறியில் ரவளி தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
