போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (11) காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
“இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.
சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
