மூன்று நாடுகளின் தூதுவர்கள் நேற்று (10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்க்கொண்டிருந்தனர்.
தாய்லாந்து , இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தூதுவர்களே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.
சிறுப்பிட்டிப் பகுதியில் அமைந்துள்ள தொழில் திறன் பயிற்சி மையத்தையும் பார்வையிட்டனர். அங்கு நெசவுப் பயிற்சியில் ஈடுபடும் நிலையத்தினை பார்வையிட்டதுடன், பெண்களின் அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய உதவிகள் தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டனர்.
குறித்த தூதுவர் குழுவினர் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
