வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில், இரத்ததான நிகழ்வு இன்று (11) இடம்பெற்றது.
சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்திமாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை ஒழுங்கு செய்து நடத்தியுள்ளனர்.
உயிர் காக்கும் உன்னத பணியில் இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களது குருதிக் கொடையை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
