• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Monday, March 20, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

தேர்தலுக்காக அரசியல் நாம் செய்யவில்லை – மக்களுக்கானதே எமது அரிசியல்

சுமந்திரன் எம்.பியின் கருத்துக்கு கஜதீபன் சுடச்சுட பதிலடி

தேர்தலுக்காக அரசியல் நாம் செய்யவில்லை – மக்களுக்கானதே எமது அரிசியல்
161
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவது பற்றி நான் தெரிவித்த கருத்துக்கள், எமது கட்சியின் முடிவுகள். கட்சிக்குத் ஒன்றும் தெரியாமல் சொன்ன விடயங்கள் அல்ல அவை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அவை என்று புளொட் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னைநாள் மாகாணசபை உறுப்பினருமான ப. கஜதீபன் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அண்மையில் வவுனியாவில் நடைபெற்றது. இதில், உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கூட்டமைப்பை விட்டு எந்தத் தரப்பு பிரிந்து சென்றாலும், நாங்கள் கூட்டமைப்பாக செயல்படுவோம் என்று புளொட் கட்சியின் கஜதீபன் தெரிவித்தார்.

இதையடுத்து, உள்ளூராட்சி தேர்தலில் அதிகவட்டாரங்களை வெல்ல தொழில்நுட்ப ரீதியாக ஆராய்வதாகவும், பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடியதாகவும் கஜதீபன் விடயம் தெரியாமல் கதைக்கிறார் என்றும் சுமந்திரன் எம். பி. குறிப்பிட்டார்.

இந்நிலையில், சுமந்திரனின் கருத்து தொடர்பாக அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

“அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவர் சாதாரண அரசியல்வாதியாக மட்டுமே இருக்கலாம். ஆனால், அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவர் சித்தார்த்தன். அவர்தான் எமது கட்சித் தலைவர்.

ஆனபடியால், ஓர் ஆசனம் அங்கு கிடைக்கும், ஓர் ஆசனம் இங்கு கிடைக்கும் என மக்களின் நம்பிக்கையை பெற, தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இவ்வளவு காலமாக வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு செல்ல முடியாது.

நாங்கள் ஒரு கட்டமைப்பாக இயங்குவோம். இந்தக் கட்டமைப்பில் விருப்பமில்லாதவர்கள் வெளியேறிச் செல்லலாம்.

எனக்கு தெரியாமல் நான் கதைக்கவில்லை. எமது கட்சி தலைவர் சித்தார்த்தனுக்கு அரசியல்ரீதியாக என்ன விடயம் தெரிந்தாலும், நான் உட்பட கட்சியிலுள்ள எல்லா முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடுவார்.

தனித்து போட்டியிடுவது பற்றி சுமந்திரன் தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியானதைத் தொடர்ந்து, நான் சித்தார்த்தனின் வீட்டுக்கு சென்றேன். கட்சியின் முக்கியஸ்தர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் இதைப்பற்றி கலந்துரையாடினோம்.

ஒரு சில தேர்தல் ஆதாயங்களுக்காக கட்டமைப்பை உடைக்க முடியாது, அடிமட்ட மக்களை குழப்பமடைய வைத்து விட்டு, மீண்டும் ஒன்று சேர்த்து செயல்படுவது சாத்தியமற்றது என்று இதன்போது பேசி தீர்மானித்தோம்.

நாங்கள் விரிவாக இன்னொரு விடயத்தையும் ஆராய்ந்தோம். 2018 உள்ளூராட்சி தேர்தலில் கிட்டத்தட்ட 30 வீதமான வாக்குகளைத்தான் பெற்றோம். நாங்கள் 50 வீதத்துக்கு அதிக வாக்குகளை பெற்றிருந்தால், சபைகளில் நெருக்கடியில்லாமல் ஆட்சி அமைத்திருக்கலாம்.

அப்படியான பொறிமுறையை உருவாக்க நாங்கள் எல்லோரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். வாக்கு குறைந்ததற்கு என்ன காரணம் என்பதை ஆராயாமல், வெறுமனே தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் எனக் கூறி தொழில்நுட்பத்தின்மீது பழியை போட்டு விட்டு நாங்கள் வேலை செய்ய முடியாது.

நாங்கள் தேசியரீதியாக தேர்தல் முறையை மாற்ற வேலை செய்ய வேண்டும். அடிமட்டத்தில் இன்னும் பலமான அடித்தளத்தை உருவாக்கி, மற்ற தமிழ் தேசிய கட்சிகளையும் இணைத்து செயல்பட வேண்டும்.

பூநகரியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஊர்காவற்துறையில் ஈ. பி. டி. பி. ஆட்சியமைத்த உதாரணங்கள் உள்ளன. நாங்கள் ஏனைய இடங்களிலும் தனித்து ஆட்சியமைக்கலாம். பல வட்டாரங்களில் ஒன்று இரண்டு வாக்குகளால்தான் வெற்றியடைந்துள்ளோம்.

சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறிக்கொண்டு, சமூகத்தை தவறாக வழிநடத்திக் கொண்டு, பேச்சுக்கு சென்றதே துரோகம் என கூறிக்கொண்டுள்ள தரப்புக்களை வளர்த்து விடும் ஏற்பாடுகளையே நாம் செய்யப் போகிறோம். அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் கட்சிகளும் வளர்ந்து விடும். நாம் அப்படி செயல்பட முடியாது.

எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லை. யாழ். மாவட்டத்தில் எமக்கு 2 எம்.பிக்கள் தான். கிளிநொச்சியை மையப்படுத்தித்தான் சிறீதரன் வாக்கு எடுக்கிறார் என்றால், யாழ்ப்பாணத்தில் 2 பேர்தான் – சித்தார்த்தனும், சுமந்திரனும்தான் எம். பிக்கள். ஆனால், எமக்குள்ள பிரதேசசபை ஒன்று மட்டும்தான். சிலவேளை நாம் இழக்கலாம் அல்லது இன்னும் பலவற்றை கைப்பற்றலாம். அதனால் எமக்கு பெரிய எதிர்பார்ப்புக்களில்லை.

ஒற்றுமையை குலைக்கும் தவறான முன்னுதாரங்களை அடுத்த தலைமுறைக்கு காண்பிக்கக் கூடாது என்பதற்காக இப்படியான முன்மொழிவுகளை எதிர்க்கிறோம். எமது ஆட்களை பதவியில் இருத்த வேண்டும் என்பதலோ அல்லது வேறு காரணங்களாலோ அல்ல.

நான் அறிவித்தது கட்சியின் முடிவுதான். நாங்கள் கட்சியாக ஆராய்ந்த பின்னர் அதன் முடிவை அறிவித்தேன்“ என்றார்.

Tags: jaffna newskajatheepanM.A.Sumanthiran m.pThamil oliThamiloli news


Previous Post

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆறு மாதம் தாமதமாகலாம் – மஹிந்த தகவல்

Next Post

இலங்கையின் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாவை பாவிக்கலாம்

Next Post
இலங்கையின் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாவை பாவிக்கலாம்

இலங்கையின் வர்த்தகத்திற்கு இந்திய ரூபாவை பாவிக்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk