சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 79 போதை மாத்திரைகளுடன் 49 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே சுன்னாகம் பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
