காப்பற்றப்பட்ட நிலையில், வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவிற்கு கப்பல் மூலம் சென்ற நிலையில் பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் தத்தளித்த நிலையில், காப்பாற்றப்பட்டு வியட்நாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர்.
உடனடியாக அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததையடுத்து அவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, நீண்டநாட்களிக் பின்னர் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
