காரைநகர் ஈழத்துச் சிவன் ஆலயத்தில் திருவெம்பா உற்வசத்தை வழமை போன்று சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை (18) போராட்டம் ஒன்று மேற்க்கொள்ளப் படவுள்ளது.
ஈழத்துச் சிதம்பரம் என வர்ணிக்கப்படும் காரைநகர் சிவன் கோயிலில் திருவெம்பாவை உற்சவத்தை நடத்தாது பாலஸ்தாபனம் செய்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில், அதனைக் கண்டித்து ஆலய உபயகாரர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டதையடுத்து பாலஸ்தாபனம் செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்று இடைக்கால தடையுத்தரவை விதித்தது.
எனினும், திருவெம்பா உற்சவத்தை கொரோனாத் தொற்றுக் காலத்தில் நடத்தியமை போன்று காலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை நடத்த ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே காரைநகர் வாழ் மக்களால் நாளை ஞாயிற்றுக்கிழமை போராட்டம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.
