தெல்லிப்பளை புற்றுநோய், வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் இன்று (20) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.
கனடா மக்களின் 10 மில்லியன் நிதிப்பங்களிப்பில் இவ் மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
கனேடிய தமிழ் காங்கிரஸினால் ஒழுங்கமைக்கப்பட்ட முதற்தொகுதி மருந்துப் பொருட்கள் இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கனேடியர் தமிழர் பேரவையின் மனிதநேயப் பணியாளர் சிவம் வேலுப்பிள்ளை, செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமரன், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்கள், பணியாளர்கள், நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
