கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலகத்துக்கு அருகாமையில் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இன்று (22) அதிகாலை முறிந்து வீழ்ந்ததில் பலத்த சேதம் எற்படுட்டுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஆலமரம் முறிந்து வீழ்ந்ததுள்ளது.
இதில் முச்சக்கரவண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒருங்கிணைப்பில் அரச மரக்கூட்டுத்தாபனம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்களின் கூட்டு ஒத்துழைப்பில் மரமானது வெட்டி அகற்றப்பட்டது.
