வறுமை காரணமாக பசியினால் வாடிய சிறுவன் போஷாக்கு பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை – மூதூர் – 64 ஆம் கட்டை – சகாயபுரம் பகுதியில் இவ் துன்பவியல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைரமுத்து ராமராஜன் என்ற சிறுவனே பட்டினியின் கொடுமையால் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிறுவனின் தற்காலிக வீட்டில் உள்ளேயும் வெளியேயும் மழை வெள்ள நீர் தேங்கி நின்றது. இனிமேலாவது பட்டினியில் இருக்கின்ற சிறுவர்களைப் பாதுகாக்க அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் விரைந்து செயற்பட வேண்டும். சகாயபுரம் கிராமம் போன்று பல கிராமங்களில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி பெருமளவு மக்கள் கவனிப்பாரற்று உள்ளனர். அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – என்று மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
