கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்ற நிலையில், பிலிப்பைன்ஸ் கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8ஆம் திகதி மியான் மாரில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு இலங்கையைச் சேர்ந்த 303 பேர் பயணித்த படகில் மியான் மாரில் இருந்து தென் கடற்பரப்பு வுங் டாவ் கடற்கரையில் இருந்து 258 கடல் மையில் கடலில் படகு கடலில் மூழ்கும் நிலையில் மீம்கப்பட்டு வியட்நாம் நாட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
3 தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் உலக மீள்குடியேற்ற ஸ்தாபனமான (ஜ.எம்.ஓ) அமைப்பு அனுசரணையுடன் மீண்டு நாட்டுக்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்த 151 பேரை இன்று செவ்வாய்கிழமை வியட்நாம் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கைக்கு அனுப்புவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாளை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
