கட்டி முடிக்கப்பட்டுள்ள மக்களின் பாவணைக்கு கையளிக்கப்படாது உள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பாவணைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ் பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 94 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு 2020 இல் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து. 2022 மே மாதம் நிறைவு செய்தது. வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான காணியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
