மன்னாரில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலை மன்னார் தாராபுரம் பகுதியில் இன்று (29) காலை குறித்த விபத்து பதிவாகியுள்ளது.
மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிலும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வீதியில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
