வடமராட்சி – அல்வாய் பகுதியில் கிணற்றில் இருந்து 60 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அல்வாய் – அம்பாள் கோவிலடியைச் சேர்ந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஶ்ரீ அம்பாள் வித்தியாலயத்திற்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிணற்றில் குளிப்பதற்கு சென்றவரே தவறி வீழ்ந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிணறு அறுபது அடி ஆழம் கொண்டது. கிணற்றில் அமைக்கப்பட்ட கப்பி பாதுகாப்பற்ற முறையில் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
