தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவையாளர்களால் தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பொலிஸார் இதுவரை இச்சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காகவே கிராம சேவையாளர்கள் போராட்டம் மேற்க்கொண்டதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
“கிராம அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?”, “இன்று எங்களுக்கு நாளை உங்களுக்கு”, “எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?”, “அலுவலகத்தை சேதமாக்கியோரை கைது செய்”, “தீ வைத்தது உங்கள் கை வெந்தது உங்கள் சொத்து” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
