வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ஜனவரி மாதம் முதல் மாற்றம் செய்யப்பட உள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியுள்ளது.
இதன்போது, வாகன உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதால் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
