மொனராகலை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இக் கொடூர கொலையில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
பிபிலை நகரில் குடும்பப் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கிடையிலான குடும்பத் தகராறே இந்தக் கொலைக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, பதல்கும்புர நகரில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இரு கொலைகள் தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
