சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்று (31) இரவு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் பேருந்தில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
