இந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவைவைய எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அது தொடர்பில் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பணிப்புரைக்கைமய அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு மாநில அரசாங்கத்துடன் அது தொடர்பில் ஏற்கனேவ பேச்சுவார்த்தைகள் இராஜதந்திர மட்டத்தில் நடைபெற்று வருவதுடன் அது தொடர்பில் சாத்தியமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் மார்ச் மாதத்தில் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
