அமைச்சரவையில் இந்தமாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், புதிய ஆளுநர்கள் நிமிக்கப்பட உள்ளதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுடன் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக 12 அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
