கனடா நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டை சேர்ந்த அரசியல் வாதிகள், முக்கிய பிரமுகர்கள், தொழில் அதி பர்கள் என பலர் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர்.
இதன் காரணமாக கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்வடைந்தது. கடந்த ஆண்டு மட்டும் வீட்டு விலைகள் 20 சதவீதம் உயர்வடைந்தது.
அதேபோல் வீட்டு வாடகையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனால் கனடா நாட்டினர் தங்கள் சொந்த நாட்டில் சொத்துக்கள் வாங்க கடும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சொத்துக்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைக்கும் வகையிலும் சொந்த நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கத்திலும் வெளிநாட்டவர் சொத்துக்கள் வாங்க கனடா அரசு தடை விதித்துள்ளது.
