வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை பகுதியில் கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மீனவர் நேற்று (02) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மீட்டு வீட்டுக்கு கொண்டு செல்ல முற்பட்டவேளையில் கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
