இந்தியா – அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் வீதி, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆரம்பித்து வைத்தார்.
அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்:
“இந்தியா போரை விரும்பாத நாடு. அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது. இந்த தத்துவம் கடவுள் இராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம். போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது.
எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய இராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்தார்.
