முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று (04) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஆதரவு தருமாறு இதன்போது சம்பந்தன் மஹிந்தவிடம் கோரியதாகவும், மஹிந்த அதற்கு சாதகமான பதிலை வழங்கியதாகவும் தெரியவருகிறது.
