பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே சிறையில் இருந்து இலங்கை மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“வாழ்வுரிமையை உறுதி செய்ய அரகலய போராட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இதனை அடைவதற்கு மாணவர் இயக்கம் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கின்றது.
உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக சுற்றித்திரியும் வேளையில், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டவர்கள் சிறையில் வாடுகின்றனர்.
சமுதாய நலனுக்காகவும், நாட்டில் பொருளாதார, அரசியல் மாற்றத்திற்காகவும் போராடிய நிலையில் ஜனவரி 1ஆம் திகதியுடன் 135வது நாள் சிறைவாசத்தை கழிக்கின்றேன். போராடியவர்கள் இன்னும் பலர் சிறையில் வாடுகிறார்கள்.
நெருக்கடியின் காரணமாக நடுத்தர மக்களின் வாழ்க்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் இந்த நிலைமை சமூகத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்தை முற்றாக அழித்துவிடும்.
மக்கள் போராட்டத்தின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ரணில் ராஜபக்ச, முன்பு போன்றே தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.
தமது தோல்விகளையும், அயோக்கியத்தனத்தையும் மூடிமறைக்கும் நோக்கில் அரசாங்கம் மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் பாரிய அவதூறு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கம் இத்தகைய அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்தாலும் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
இது அரகலய போராட்டத்தின் ஆரம்பம் மட்டுமே. மக்களின் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
