ஊரெழு றோயல் வி.கழகம் வடமாகாண ரீதியாக நடத்தி வரும் “வடக்கின் சமர்” சுற்றுப்போட்டிகளில் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
இன்று (05) இடம்பெற்ற முதலாவது போட்டியில் குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி யங்லயன்ஸ் வி.கழகம் மோதியது.
ஆரம்ப முதலே அதிரடி காட்டிய பாடுமீன் வி.கழகம் 4 : 1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் யாழ்.மண்ணில் பலம் பொருந்திய அணிகளான நாவந்துறை சென்.நீக்கிலஸ் வி.கழத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி வி.கழகம் மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மாறி மாறி கோல் போடும் முயற்சியில் இரண்டு அணிகளதும் அனல் பறக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி வி.கழகழ் அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டிகளுக்கு தமிழ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
