இந்தியா – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் இராணுவ வீரர்கள், மக்கள், குழந்தைகள் பலியாகினர்.
இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய ரிசர்வ் படைப்பிரிவு போலீசார் 1,800 பேர் காஷ்மீரின் பூஞ்ச், மற்றும் ரஜோரி, அப்பர் தான்கிர ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
