தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது பற்றி நாளை மறுதினம் (07) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயல்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இது தொடர்பில் அரசியல்குழு ஒரு சிபாரிசை செய்துள்ளது. இறுதி முடிவு மத்திய செயல்குழுவில் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதில்லை எனறு அரசியல் குழுவில் முடிவெடுக்கப்பட்டதாக, எம். ஏ. சுமந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார்.
எனினும், அவ்வாறான முடிவு எடுக்கப்படவில்லையென கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டாலும், தேர்தலை பிற்போட சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும். அப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் உடனடியாக நீதிமன்றத்தை நாடுவோம் – எனவும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.
