கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப்பகுதியில் இன்று (05) காலை மூன்று வாகனங்கள் முட்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்திப் ஆபத்தான சந்தியாக காணப்படுவதுடன், பல விபத்துச் சம்பங்கள் நிகழ்ந்துள்ளதாக மக்கள விசனம் வெளியிட்டுள்ளனர்.
