தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் உள்ளூர்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுடன் பேசியே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழரசு கட்சியினுடைய மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கதமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம்பெற்றது.
அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார்கள்.
இது தமிழரசு கட்சியின் உடைய விருப்பமாக மத்திய குழுவில் முன் வைக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் வாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளின் தலைவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளோம்.
ஆகவே, கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் தீர்க்கமான இறுதி முடிவை எடுப்போம்” என்றார்.
