உள்ளூராட்சி சபைத் தேர்தல்களம் சூடு பிடித்துள்ள நிலையில் சற்றுமுன் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனை யாழ் மாநகர முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் திடீரென சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பு யாழிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டதோடு குறித்த விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் வி.மணிவண்ணன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
