அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுக்குள் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 07 ஆம் திகதி இரவு சிறுத்தை ஒன்று குறித்த பகுதியில் வசிக்கும் எஸ்.நாகராஜ் என்பவரின் வீட்டுச்சூழலுக்கு வந்து செல்லும் காட்சி, அவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி .சி. டி.வி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந் நிலையில் மக்கள் நடமாடும் பகுதியில் இரவு வேளையில் வெளிச்சத்திலும், சிறுத்தைகள் வருகை தந்து கால் நடைகளை கொண்டு செல்வதனால் இப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
