உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு – கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அங்கஜன் இராமநாதன் தலைமையில் கை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் சகல கட்சிகளும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் முன்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் வடக்கு கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
